மதுரையில் தனியார் மனமகிழ் மன்றத்தில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 6ஆயிரத்து 228 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த மது பாட்டில்கள் அனுமதிக்கப்படாத நேரத்தில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் பணச்செல்வம் என்பவருக்கு சொந்தமான தனியார் மனமகிழ் மன்றத்தில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில் இவைகள் சிக்கின.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேலாளர் மகாராஜனை கைது செய்தனர். உரிமையாளர் பணச்செல்வத்தை தேடி வருகின்றனர்.