செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பைக்கில் வலம் வந்து இளைஞர்கள் அடாவடி.. எச்சரித்து அனுப்பிய போலீசார்..!

Oct 30, 2022 07:23:05 PM

சென்னை த்தில் தலைக்கவசம் அணியாததுடன், அதிக ஒலி எழுப்பியபடி பைக்குகளில் வலம் வந்த இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் கொண்டாட்டமானது சென்னை நந்தனம் அருகில் உள்ள தேவர் சிலை அருகே நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் விழாவில் பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்த நிலையில், நந்தனம் வழியே செல்லும் அண்ணாசாலையில், அதிக ஒலி எழுப்பிக்கொண்டு உயர் தர இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் தலா 3 பேராக இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அதனைக் கண்ட காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, மெதுவாக செல்லுமாறு அறிவுரை கூறியபோது, தாங்கள் என்ன கேஸ் போடுவீர்களா? என கூட்டத்தில் இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார், வாகனத்தில் வந்த இளைஞர்களை பிடித்தும் அவர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதலும் செய்தனர்.

இந்நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்ததற்கான சரியான காரணத்தை கேட்டபோது, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தலைகவசம் அணியாததால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தரப்பிலிருந்து விளக்கமளித்தனர். இதன்பின் வாகனங்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி இளைஞர்கள் நீண்ட நேரமாக காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின் வாகனங்களை பறிமுதல் செய்து ஏற்றி செல்லும் போலீஸ் ரெகவர் வேன் வரவே, வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களும், அவர்களுக்கு சிபாரிசு செய்ய வந்த அமைப்பினரும் காவல்துறையினரிடம் சலசலப்புடன் கூடிய வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சுற்று வட்டாரத்தில் நெடு நேரமாக பதற்றம் நீடித்து வந்த நிலையில், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர, சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திர நாயர், துணை ஆணையர் தேஷ்முக் சேகர் மற்றும் உதவி ஆணையர்கள் அங்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர்களை மன்னிப்பு மட்டும் கேட்க வைத்த காவல் துறையினர் வழக்குகள் எதும் பதிவிடாமல் அவர்களின் வாகனங்களை ஒப்படைத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement