செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிச்சை எடுக்காமல் உழைத்து சாப்பிட்டது குத்தமா நியாயமாரே? திறக்கப்படுமா மாற்றுத்திறனாளியின் கடை?

Oct 30, 2022 07:33:04 AM

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 18 வருடமாக மாற்றுத்திறனாளி பெண் நடத்தி வந்த பெட்டி கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்த நிலையில், முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததால் தான் கடையை பூட்டியதாக அதிகாரி ஒருவர் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ரேவதி. 48 வயதான இவர் தனது உடல் குறைபாட்டை காட்டி பிச்சை எடுக்காமல் கடந்த 18 வருடங்களாக விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து உழைத்து பிழைப்பு நடத்தி வந்தார். அவரது மகன் உதயகுமாரும் மாற்றுத் திறனாளி என்பதால் இந்த கடையை நடத்தி அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பஸ் நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக கடை இருப்பதாக கூறி விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கடையை காலி செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர், தான் மாற்றுத் திறனாளி என்பதால் தனக்கு விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில் தொடர்ந்து கடை நடத்த அனுமதி அளிக்க வேண்டும், வாடகை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விருத்தாசலம் நகராட்சி அலுவலகர்கள் , மாற்றுத்திறனாளி பெண் நடத்தி வந்த கடையை இழுத்து பூட்டி சீல் வைத்தனர். கடந்த 10 மாதங்களாக இவரது கடை பூட்டி கிடக்கிறது. இந்நிலையில் இவர் கடையை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கூறி விருதாச்சலம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த அலுவலரிடம் முறையிட்டுள்ளார்.

அப்போது அந்த அதிகாரி நீங்கள் ஏன் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு கொடுத்தீர்கள், அதனால் தான் தங்கள் கடைக்கு சீல் வைக்கப்பட்டது என கூறியுள்ளார். மேலும் தன்னால் வாடகை கொடுக்க முடியாது, நான் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருக்கிறேன் எனக் கண்ணீரில் கதறி அழுவதை மனுவில் எழுத்தாக எழுதிக்கொடுக்கும்படி கூறி உள்ளார்

மாற்றுத்திறனாளி பெண் ரேவதியோ, தன்னால் வாடகை கொடுத்து கடையை நடத்த முடியும் என்றும் அதனால் தனக்கு அந்த கடையை மீண்டும் நடத்த அனுமதி அளித்து தன்னிடமிருந்து வாடகையை வசூலிக்க வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் .

தனது வாழவாதாரத்திற்கு உதவ வேண்டி மீண்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ள மாற்றுத்திறனாளி பெண் ரேவதி தனக்கு கடை கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்.


Advertisement
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement