காஞ்சிபுரம் மாவட்டம் களியனூரில் ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரிய வெட்டிய காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டு வாசல் அருகே மர்ம நபர்கள் 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
படுகாயமடைந்த ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.