வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில்,செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு பருவமழை 23ம் தேதி வரை நிலவியதாலும், சிட்ரங் புயல் காரணமாகவும் தென்னிந்திய பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதமானதாக தெரிவித்தார்.
காலதாமதமாக பருவமழை தொடங்குவதால், மழை பொழிவில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்த பாலசந்திரன், தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 47 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாகவும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 15 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.