செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக அமளி.. சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்!

Oct 18, 2022 06:55:19 PM

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு எடுக்கக்கோரி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்போவை கூடடத்தொடர் இன்று தொடங்கியதும் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்திற்கு முன்பாகவே விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு நேரம் ஒதுக்கி தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பேரவை விதி 32 ன் படி, பேரவை கூடும் முதல் நாளில் வினா விடைக்கு முதல் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.கலகம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பிய சபாநாயகர் அப்பாவு , இருக்கையில் அமரவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், அவை விதிகளை மீறி நடக்கும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனினும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிரக்ட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சுமார் 20 நிமிட அமளிக்குப் பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement