செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெள்ளத்தில் சிக்கி நசுங்கி போன சொம்பான மாருதி சுசுகி XL 6 கார்..!

Oct 18, 2022 08:33:15 AM

கல்வராயன் மலை பகுதியில் இரவில் பெய்த கனமழையால் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்தம் புதிய மாருதி சுசுகி எக்ஸ் எல் சிக்ஸ் கார் ஒன்று சிதிலமடைந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் நான்கு கிலோமீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு உடைந்து நொறுங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

இரு புல்டவுசர் எந்திரங்களுக்கு இடையே சிக்கியதால் மாருதி சுசுகி எக்ஸ் எல் சிக்ஸ் கார் இது போன்று உருகுலைந்து  நசுங்கி போன சொம்பாக கிடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் இந்த கார் குண்டு விழுந்தது போல உருக்குலைந்து காணப்படுகின்றது

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக வரலாறு காண அளவில் மழை பெய்து வருகிறது.

கல்வராயன் மலை அடிவார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனால் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள காட்டாற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் வெள்ளம் ஏற்பட்டது.

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தில் கோட்டப்பட்டி அடுத்த தாதன்கொட்டாய் கிராமத்தில் ஆற்றோரத்தில் உள்ள பாபோஜி ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய மாருதி சுசுகி XL 6 காரை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

காடு, மலை, கரடுமுரடான பாதைகளில் பாய்ந்தோடிய நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இழுத்துச்செல்லப்பட்ட இந்த காரின் சக்கரங்கள் அனைத்தும் பிய்த்துக் கொண்டு சென்று விட்டது.

மலையில் உருண்டு புரண்டு இழுத்துச்செல்லப்பட்டதால் கார் சுத்தமாக உடைந்து நொறுங்கி கண்டமானது

தனது புத்தம் புதிய காரின் நிலையை பார்த்து வாகன உரிமையாளர் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த காரை எடுத்துச்சென்று சர்வீஸ் செய்து கொடுப்பார்களா ? அல்லது புதிய கார் மாற்றிக் கொடுப்பார்களா ? என்ற கேள்வியுடன் காத்திருக்கின்றார்.


Advertisement
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement