செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஐயா நான் தான் கொலைகாரன்: போலீசாரிடம் உண்மையை சொன்ன திருட்டு இளைஞர்

Oct 14, 2022 09:11:16 AM

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி நீதிமன்றத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர்  கடந்த 20 நாட்களுக்கு முன்பு தாம் ஒருவரை கொலை செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனங்களின் பேட்டரிகள் அடிக்கடி திருடு போவதாக வந்த புகாரை அடுத்து திருப்பாலைவனம் விஜி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, கடந்த 20 நாட்களுக்கு முன்பு சின்ன ஓபலாபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை தமது நண்பருடன் சேர்ந்து கழுத்தறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

போலீசார் விஜியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர் விஜியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகையை சேர்ந்த லெவின் என்பவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த அஜித் குமார் என்பவருடன் லெவினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் சிறையில் இருந்து முன் ஜாமீனில் வந்த லெவின் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் லெவினுக்கும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வட மாநில பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தன் காதலியை நண்பன் அஜித்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்த லெவின், காதலியை 2 நாட்களுக்கு வீட்டில் தங்க வைக்குமாறு அஜித்குமாரிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக் கொண்ட அஜித்குமார் அந்த பெண்ணை தன் வீட்டில் தங்க வைத்தது மட்டுமின்றி நள்ளிரவில் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை காதலி மூலம் தெரிந்து கொண்ட லெவின் ஆத்திரம் அடைந்து தனது பழைய கூட்டாளியான திருப்பாலைவனத்தைச் சேர்ந்த விஜியை அழைத்து கொண்டு அஜித்குமாரை சந்தித்து, மது வாங்கி கொடுத்து கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பேட்டரி திருடிய வழக்கில் கைதான விஜியை கொலை வழக்கிலும் கைது செய்த போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட லெவின் மற்றும் அவரது காதலியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement
திருநெல்வேலியில் மார்பக புற்றுநோயை வென்றோரின் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
சென்னை, அடையாரில் மெட்ரோ ரயில் பணிகள் சோதனையால் வரும் 26, 27 நாட்களில் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி குளச்சல் பகுதி கால்வாயில் வெள்ளப்பெருக்கு.. கரை உடைந்து தண்ணீர் குடியிருப்புகுள் சூழ்ந்த வெள்ளம்..
தூத்துக்குடியில் பெண்களுக்கான பிங்க் பூங்கா திறந்து வைத்தார் எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்.
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது
விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு
ஈரோடு காவல்துறை சார்பில் நடத்திய ஆயுத கண்காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி
தெருநாய்களுக்கு விஷ உணவு கொடுத்து கொன்ற நபர் - காவல் நிலையத்தில் புகார் அளித்த தன்னார்வலர் ..
கோபியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement