நெல்லை மாவட்டத்தில் உப்பு பாக்கெட்டுகளை போதைப் பொருளெனக்கூறி விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமான 3 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் 2 கோடி மதிப்புள்ள “கொகைன்” எனும் போதைப்பொருள் தருவதாகக்கூறி பத்து லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கியதும், மீதிப்பணம் வாங்குவதற்காக ”கொகைன்” என்ற பெயரில் உப்பு பாக்கெட்டுகளை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.