தருமபுரி அருகே அங்கன்வாடி மையத்தில் நான்கு வயது குழந்தைக்கு காலில் சூடு வைத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமியம்பட்டியை சேர்ந்த சங்கர்-கீர்த்திகா தம்பதியின் 4 வயது மகன், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார்.
கடந்த 3ந்தேதி , அங்கன்வாடி மையத்திலிருந்து வீட்டிற்கு வந்த குழந்தையின் காலில் சூடு வைத்த காயம் இருந்ததாக கூறப்படுகின்றது.
அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் சமையலர் உரிய பதிலளிக்காமல் பெற்றோரை மிரட்டியதால், சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சிதலைவரிடம் பெற்றோர் புகாரளித்துள்ளனர்