செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலீசுக்கு தெரியாமல் சடலத்தை மறைத்த நவ ஜீவன் மருத்துவமனை..! ரூ 3 லட்சம் அபராதம் விதிப்பு

Oct 11, 2022 03:09:36 PM

தீமிதி திருவிழாவில் காயமடைந்து 35 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்று உயிரிழந்த இளைஞரை, போலீசுக்கு தெரியாமல் தகனம் செய்ய வைத்ததோடு, இறப்புச்சான்றித்ழ கொடுக்காமல் இழுத்தடித்த திருவாரூர் தஞ்சை சாலையில் உள்ள நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிர்வாகத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் . இவரது மகன் விக்னேஷ் . ((spl gfx in))கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ந்தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி விழாவில் தவறி விழுந்து தீக்காயம் அடைந்து திருவாரூர் தஞ்சை சாலையில் உள்ள நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து 35 நாட்கள் தீக்காய சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷின் உடலை பிரேத பரிசோதனை செய்து விட்டதாகவும் நன்னிலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டதாகவும் பொய்யாக கூறி உடலை உடனடியாக எரியூட்ட செய்துள்ளனர்.

இறப்புச் சான்றிதழ் மற்றும் டிஷ்சார்ஜ் சம்மரி மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டணத்திற்கான பில் ஆகியவற்றை விக்னேஷின் பெற்றோர் கேட்ட போது அலைக்கழித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக விக்னேஷின் தந்தை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, விக்னேஷ் தங்களது மருத்துவமனையில் இறக்கவில்லை என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு மேமாதம் 25ந் தேதி அவரது உடலை பெற்றோர் வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விட்டதாக அந்த ஊரைச் சேர்ந்த ஆறு பேர் கையொப்பமிட்டு கொடுத்துள்ளதாகவும் கூறி கேஷ் ஷீட் ஒன்றையும், விக்னேஷின் பெற்றோர் தங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையான 86,451 ரூபாயை வழங்காத நிலையில், அந்த தொகையை நவஜீவன் மருத்துவமனை தலைவர் கார்த்திகேயனே செலுத்தியதாகுவும் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கிய மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு, விக்னேஷுக்கு சுமார் 35 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரியப்படுத்தாமலும் சிகிச்சையளித்ததற்கான கேஷ் ஷீட் டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவற்றை பத்திரமாக வைத்திருக்காமலும் அதனை பெற்றோருக்கு வழங்காமல் இருப்பதிலிருந்தும் விக்னேஷ் மருத்துவமனையிலேயே உயிரிழந்திருப்பார் என கருதுவதாக தெரிவித்தனர்.

விக்னேஷின் பெற்றோரை அலைக்கழித்து, மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டம் ஏற்படுத்திய குற்றத்திற்காக நவ ஜீவன் மருத்துவமனை நிர்வாகம் 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவிற்கு கூடுதலாக 10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஆணையம், விக்னேஷின் இறப்பு குறித்து முறையாக சான்று வழங்கி அவரது மகன் விக்னேஷ் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement