செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

2வது முறையாக திமுக தலைவரானார் மு.க. ஸ்டாலின்..

Oct 09, 2022 05:13:32 PM

 திமுக தலைவராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி கனிமொழி எம்பி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில், திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.

தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தவிர, வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டார்.

 இதையடுத்து மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் உருவ படங்களுக்கு, மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 இதேபோல் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.

 தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகம்மது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தலைமை நிலைய முதன்மை செயலாளராக கே.என். நேருவை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்தார். பின்னர் கட்சியின் துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்பி ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன்,டி.ஆர். பாலு ஆகியோருக்கு, கட்சி மூத்த தலைவர்கள் பிரமாண்ட ரோஜாமாலைகள் அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய  மு.க. ஸ்டாலின், திமுகவினர் சிலர் பொது இடங்களில் நடந்து கொண்ட முறையின் காரணமாக கட்சி  பழிக்கும், ஏளனத்துக்கும் ஆளானதாகவும், ஆதலால் கட்சியினர்   மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தி  எச்சரிக்கையாக பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement