செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு விமரிசை..!

Oct 04, 2022 07:07:15 PM

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் மக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில், கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவியை வழிபடும் விதமாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை வைத்து பூஜை செய்வர். வீடுகளிலும் கல்வி உபகரணங்களை வைத்து வழிபடுவர்.

அந்த வகையில், இன்று நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலை முதலே கோவில்களில் திரண்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி, திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலில் குவிந்த மக்கள் நோட்டு, பேனா, வெண்தாமரை மலர்கள் உள்ளிட்டவற்றை வைத்து வழிபட்டுச் சென்றனர். 

தூத்துக்குடியில் சிதம்பர விநாயகர் ஆலயத்தில் உள்ள கலைமகள் சன்னதியில் சரஸ்வதி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

இதே போல, நெல்லை டவுன் கீழரத வீதியில் உள்ள விஜய சரஸ்வதி அம்மன் கோவிலில் காலையில், வித்யா ஹோமமும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. 

ஆயுத பூஜையை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் பேருந்துகளை சீரமைக்க பயன்படுத்தும் தொழில் கருவிகளை அடுக்கி வைத்து அதற்கு சூடம் ஏற்றி வழிபட்டனர்.

இதே போல, சேலம் மாவட்டத்தில் நகை செய்யும் தொழிலாளர்கள், நகை செய்ய பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்து அதற்கு பூஜை செய்தனர்.

மக்கள் தங்களது வீடுகளிலில் உள்ள வாகனங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement