செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அதிக லாபத்தை அள்ளித்தரும் சன்னரக நெல்.. ஆர்வத்துடன் பயிரிடும் டெல்டா விவசாயிகள்..!

Sep 30, 2022 07:56:24 PM

குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபத்தை அள்ளித்தரும் சன்ன ரக நெற்பயிரை டெல்டா விவசாயிகள் அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். மோட்டா ரகத்தை விட சன்ன ரக அரிசியே விற்பனயிலும் உச்சத்தில் உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தமிழ்நாட்டில் காலங்காலமாக பாரம்பரிய நெல் ரகங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். பொதுவாக நெல் ரகங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அளவில் பெரியவை "மோட்டா ரகம்" என்றும் அளவில் சிறியவை "சன்ன ரகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

சாப்பாட்டு அரிசி, சன்ன ரகமாக இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பம். காரணம் அதுதான் மிக உயர்வான ரகமாகும். சாப்பிடுவதற்கும் எளிதாக இருக்கும். இதனால் தான் புதிதாக உருவாக்கப்படும் பெரும்பாலான வீரிய ரகங்களும், சன்ன ரகங்களாகவே உருவாக்கப்படுகின்றன.

 

சன்ன ரக நெல் வகைகளின் அறுவடை காலம் 100 முதல் 120 நாட்கள் மட்டுமே. ஆனால் மோட்டா ரக நெல் வகைகளின் அறுவடை காலம் 5 முதல் ஆறு மாதங்கள் ஆகும். குறுகிய கால அறுவடை என்பதாலும், அதிக அளவில் விளைச்சல் தருவதாலும் டெல்டா விவசாயிகள் பெரும்பாலும் சன்ன ரக நெற்பயிர்களையே பயிரிடுகின்றனர்.

தமிழகத்தில் பி பி டி, ரகம் 48, பொன்னி , ஆந்திரா பொன்னி,சீரக சம்பா, விஜி டி -1 ,அனந்தூர் சன்னம் , முத்தின சன்னம் மற்றும் பாரம்பரிய சன்ன ரக நெல் வகைகள் பயிரிடப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 80 சதவீதம் சன்ன ரக நெற்பயிர்கள் மட்டுமே பயிரிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இவை அதிகமாக சம்பா, தாளடி,குருவை உள்ளிட்ட பருவங்களில் அறுவடை செய்யப்படுகிறது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement