செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பொதுப் பாதை கேட்ட ஊர்ப் பெண்கள் மீது கல்வீசிய எஸ்.பி-யின் மகள்கள்..! பூந்தொட்டியை வீசிய காட்சிகள்.!

Sep 28, 2022 08:05:56 AM

சென்னையில் சிபிசிஐடி எஸ்.பி தில்லை நடராஜனுக்கு சொந்தமான பட்டா இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அப்பகுதி வாசிகளை எஸ்.பியின் மகள்கள் கல்வீசி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் MC. ராஜா தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை சிபிசிஐடி காவல் துறையின் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் என்பவர் தனக்கு சொந்தமான பட்டா இடம் என நீதிமன்ற உத்தரவு பெற்று சுவர் எழுப்பி உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அந்த சுவரை உடைத்து வீசியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த சாலை பகுதியில் கட்டிட கழிவுகளை கொட்டி பொதுமக்கள் பயன்படுத்த இயலாதவாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு சர்ச்சைக்குரிய சாலையை இறுதி உத்தரவு வரும் வரை அதிலிருக்கும் தடைகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என 7ஆவது மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

எந்த அரசு அதிகாரிகளும் பிரச்சனையை தீர்க்க முன்வராததால் அப்பகுதி மக்கள் கட்டிடகழிவுகளை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் மகள்கள் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் மீது செங்கற்களை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

உச்சகட்டமாக மாடியில் இருந்து பூந்தொட்டிகளை பொதுமக்கள் மீது வீசி எறிந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் படி நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது..

இந்த தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் ஒரு பெண் காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் எவரும் வரவில்லை. இதற்கிடையே தன்னை ஒரு பெண் கடித்து விட்டதாகவும், கல்வீசி தாக்கியதாகவும் கூறி தில்லை நடராஜனின் 2 மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள எஸ்.பி தில்லை நடராஜன்,அந்த நிலம் தனக்கு சொந்தமான பட்டா நிலம் என்றும் தான் போலீஸ் என்பதால் நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவதாகவும், அப்பகுதி வாசிகள் வம்படியாக வந்து வழிப்பாதை கேட்டு பிரச்சனை செய்வதாகவும் தெரிவித்தார்.


Advertisement
நகராட்சி அலுவலக வளாகத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் மீது தாக்குதல்
புவிசார் குறியீடு பெற்ற பூண்டைக் கண்டுபிடிக்கும் கருவி அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் விற்பனை
நண்பன் மூலமாக ரூ.7000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது
பார்சல் ஏற்றிச் சென்ற வேனில் பயங்கர தீ விபத்து.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்..?
சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. கணக்கில் வராத ரூ.4.24 லட்சம் பறிமுதல்
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement