செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என் தாயோட ரத்தத்தை 3 ஆம் வகுப்பு படிக்கிறப்ப சாலையில் பார்த்திருகிறேன்..! உருக்கமான காவல் உதவி ஆணையர்

Sep 27, 2022 10:05:45 PM

படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணர்த்துவதற்காக 3ஆம் வகுப்பு படிக்கும் போது விபத்தில் தனது தாயை இழந்த சோகத்தை படிக்கட்டில் பயணித்த மாணவர்களிடம் விவரித்துள்ளார் சென்னை உதவி ஆணையர் ஒருவர். படிக்கட்டு பையன்களை பொறிவைத்து பிடித்த போலீஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை தண்டையார் பேட்டையில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவர் ஒருவர், கெத்து காட்டுவதாக நினைத்து அரசு பேருந்தை பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் செய்து போலீசில் சிக்கியதால் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படிக்கின்ற வயதில் பேருந்தின் படியில் நின்றும் தொங்கியும் வாழ்க்கையை போக்கிக் கொள்ள வேண்டாம் என்பதை அறிவுறுத்தும் விதமாக சென்னை ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து உதவி ஆணையர் திருவேங்கடம் மற்றும் காவல் ஆய்வாளர் சாம் சுந்தர் ஆகியோர் திடீர் பேருந்து சோதனை மேற்கொண்டனர்.

பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்களை பிடித்த போலீசார், அவர்கள் ஓடி விடக்கூடாது என்பதற்காக முதலில் அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டனர்

பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்த மாணவர்களை அழைத்து கண்டித்த போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருவேங்கடம் தான் 3 ஆம் வகுப்பு படிக்கின்ற போது தனது தாயின் ரத்தத்தை சாலையில் பார்த்ததாக உணர்ச்சிவசப்பட்டார்,

விபத்தில் சிக்கி தனது தாய் உயிரிழந்த சம்பவத்தை அந்த மாணவர்களிடம் எடுத்துக்கூறி, உங்கள் தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருந்தால் படியில் பயணம் செய்யாதீர்கள் என்று திருவேங்கடம் வேண்டுகோள் வைத்தார்.

முன் கூட்டியே புறப்பட்டு பள்ளிக் கல்லூரிகளுக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதோடு அதனை தொடர்ந்து மாணவர்களிடம் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்து பத்திரமாக பயணிக்கும்படி அனுப்பி வைத்தனர்.

 

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement