செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிஎப்ஐ, எஸ்டிபிஐ அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Sep 22, 2022 11:36:09 AM

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில்
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல் தொடர்பாக நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதே போல, தென்காசி அருகே உள்ள பண்பொழியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டித்து ஏராளமான பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நிர்வகித்து வரும் அறிவகம் மதரசாவில் அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து அந்த அமைப்பினர் ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பியதால் பதட்டமான சூழல் நிலவியது. இதனால், அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிலரது வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடலூர், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அமைப்பின் மாவட்ட தலைவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்த சோதனையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையுடன் இணைந்து போலீஸார் அந்த அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement