செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிரசவ வலி மாத்திரைகளை போதைக்காக ஊசியில் ஏற்றி கம்பி எண்ணும் மாணவர்கள்..! மெடிக்கலுக்கு சீல் போலீஸ் எச்சரிக்கை..!

Sep 19, 2022 04:52:23 PM

கோயம்புத்தூர் ரத்தினபுரியில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீர் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக் கொள்ளும் விபரீத போதைக்கும்பலை சேர்ந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள கோயம்புத்தூரில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அதில் சில மாணவர்கள் வலிநிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்

கோவை ரத்தினபுரி டாடாபாத் 9ஆவது வீதியில் போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற 3 பேரை மடக்கிப்பிடித்தனர். கல்லூரி மாணவர்களான அவர்களிடம் இருந்து ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகளையும், ஊசிப்போட பயன்படுத்தும் சிரிஞ்சுகளையும் போலீசார் கைப்பற்றினர். வலிநிவாரணத்துக்கு பயன்படுத்தும் அந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் சக மாணவர்களுக்கு போதை மருந்தாக ஏற்றி அதிகளவில் பணம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வலி நிவாரணி மாத்திரைகளை சிங்காநல்லூரில் உள்ள மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் என்பவரிடமிருந்து டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கி மற்ற மாணவர்களுக்கு சப்ளை செய்ததுதெரியவந்தது. இதையடுத்து மெடிக்கல் உரிமையாளர் கரிகாலன் மற்றும் 3 மாணவர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1,512 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதான மாணவரை மட்டும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும், மற்ற 3 பேரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் இதுபோன்ற வலி நிவாரணி மாத்திரைகளை விற்றால் அந்த கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தின்போது வலி தெரியாமல் இருக்க கொடுக்கக்கூடிய இந்த மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றுவதால் 5 மணி நேரம் வரை அதிக போதை இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.

எனவே, இதனை மாணவர்கள் பயன்படுத்துவதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதுபோன்ற மாத்திரைகளை பயன்படுத்தும்போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதாகவும், போலீசார் தெரிவிக்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தங்கள் குழந்தைகளின் கூட்டாளிகள் சேர்க்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை பெற்றோர் தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.....

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement