செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

105 திருட்டு செல்போன்களை சாமர்த்தியமாக மீட்ட திண்டுக்கல் போலீஸ்

Sep 18, 2022 04:10:25 PM

திருட்டு செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கிவர்களிடம் இருந்து IMEI எண்களை பயன்படுத்தி 105 செல்போன்களை மீட்ட போலீசார் அதனை பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். செல்போன் களவு போனால் காவல் நிலையம் பக்கம் வராதீர்கள் என்று சொல்லும் காவலர்கள் மத்தியில் திண்டுக்கல் எஸ்.பி .பாஸ்கரனின் சிறப்பான சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

செல்போன் தொலைந்தாலோ.. களவுபோனாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரக்கூடாது என்று அடித்து விரட்டாத குறையாக புகார் தாரர்களை பெரும்பாலான காவல் நிலைய போலீசார் திருப்பி அனுப்புவது வாடிக்கை.

செல்போன்கள் களவு போனால் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்க அனுப்பப்படும் நிலையில், அங்கு, செல்போன்களை மீட்டுக் கொடுப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று செல்போன்களை பறிகொடுத்தவர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போல செல்போன்கள் யார் கையில் உள்ளன என்பதை செல்போன்களில் உள்ள IMEI எண்களை கொண்டு விரைந்து கண்டு பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார். மாவட்ட சைபர் கிரைம் போலீசார் , திருட்டு செல்போன்களை பயன் படுத்தியவர்களிடம் இருந்து செல்போன் வேட்டையை தொடங்கினர்.

போலீஸ் விசாரணையில் போது சிலர் செல்போன்களை கீழே கண்டு எடுத்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர். பலர் குறைந்த விலைக்கு வாங்கியதாக தெரிவித்தனர்.

அவர்களிடம் தாங்கள் வைத்திருப்பது திருட்டு செல்போன் என்றும் இதனை பயன்படுத்துவது குற்றம் என்பதையும் போலீசார் எடுத்து கூறினர். செல்போனை தந்து விட்டால் வழக்கும், கைது நடவடிக்கையும் இல்லை என்று கூறியதும் விட்டால் போதும் என்று பலரும் தங்கள் கையில் இருந்த அடுத்தவர்களின் செல்போன்களை கொடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

 


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement