செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுக்க மறுத்த ஊர் கட்டுப்பாடு..! பாய்ந்தது சாதிய வன்கொடுமை வழக்கு..!

Sep 17, 2022 07:47:56 PM

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடு என்று பள்ளி குழந்தைகளுக்கு கடையில் திண்பண்டம் தரமாட்டோம் என்ற விவகாரத்தில் 5 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப்பதிந்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பஞ்சாகுளம் கிராமத்தில் கடந்த 2வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடும்போது இரு தரப்பு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது எதிர்தரப்பினர் ஆத்திரத்தில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் வன்கொடுமை புகார் அளித்தவர்களின் பள்ளி குழந்தைகளுக்கு கடையில் தின்பண்டங்கள் தர முடியாது என்றும் ஊர் கட்டுப்பாடு வைத்துள்ளதாகவும் கூறிய கடைக்காரர் அதனை வீடியோவாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த சாதிபாகுபாடு வீடியோ வைரலானதை தொடர்ந்து வீடியோ பதிவிட்ட ராமச்சந்திரமூர்த்தி என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் 5 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரை உடனடியாக கைது செய்தனர்.

ஆளே இல்லாத அந்த கடையை இழுத்து பூட்டிய வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊரில் கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக முருகன், குமார், சுதா ஆகிய மூவரை கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement
திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?
கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்..
ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!
இதய நோய் சிகிச்சை பெற்ற பெண்ணை செல்போனில் அழைத்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ..
கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. நல்லம்மன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்..
ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..
மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் மனநலம் குன்றிய பெண் தாக்கப்பட்டதாக புகார்..பயிற்சியாளரை தேடுவதாக சிவகங்கை போலீசார் தகவல்
மதுரையில் கனமழையால் கண்மாய்கள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. பந்தல்குடி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என புகார்..
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு.. பழுதடைந்திருந்த குடிநீர் குழாயை சரி செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு..
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement