செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெண்ணை கடத்தி பலாத்காரம்... ரவுடி கட்டை முருகன் கைக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!

Sep 17, 2022 06:17:37 AM

தூத்துக்குடியில் வேலைக்கு சென்று விட்டு தனியாக வீடுதிரும்பிய பெண்ணை கத்திமுனையில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த ரவுடி சாலையில் சறுக்கி விழுந்து கையை முறித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கத்தி எடுத்த கைக்கு மாவுகட்டு போட்டு விட்ட போலீசின் மனிதநேய மிக்க நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வேலைக்கு சென்று விட்டு தன்னுடைய வீட்டிற்கு கடந்த 14 ம் தேதி இரவு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த ரவுடி கட்டை முருகன் கூட்டாளி கோகுல்ராம் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து பெண்ணை வழிமறித்துள்ளனர்.

சத்தம் போடக்கூடாது என்று கத்தியை காட்டி மிரட்டி அந்தப்பெண்ணை தங்களது இரு சக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்று தருவைக்குளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கட்டை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பின்னர் மறு நாள் காலையில் பெண்ணை தனை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டருகில் உள்ள சந்திப்பில் இறக்கிவிட்ட ரவுடி கட்டை முருகன், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டிச் சென்றுள்ளான். தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்ல இயலாமல் அந்தப்பெண் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கட்டை முருகனின் கூட்டாளி கோகுல்ராம் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் வருமாறு அழைத்ததாக சொல்லப்படுகிறது. அந்தப்பெண் செல்ல மறுத்து கதறி அழுதுள்ளார். வராவிட்டால் வீடுபுகுந்து கொலை செய்துவிடுவதாக கடுமையாக மிரட்டியுள்ளான்

இதனால் பயந்து போன அந்த பெண் , வியாழக்கிழமை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் விரிவாக புகார் அளித்தார்.சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இதில் தொடர்புடைய ரவுடி கட்டை முருகனையும், கோகுல்ராமையும் தேடிவந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக தனது பைக்கில் தப்பிச்சென்ற ரவுடி கட்டை முருகன் சாலையில் சறுக்கி கீழே விழுந்ததில் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. குற்றவழக்கில் தொடர்புடையவராக இருந்தாலும் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மனித நேயத்துடன் மாவுக்கட்டு போட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர்

இதைத் தொடர்ந்து கட்டை முருகன் மற்றும் கோகுல்ராம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கட்டை முருகனின் கைகளில் கட்டையை வைத்து கட்டி , மாவுக்கட்டுப் போடப்பட்ட நிலையில் கூட்டாளியுடன் அவர் சிறையில் கம்பி எண்ணி வருகின்றார்..!


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement