இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கிருஸ்துதாஸை போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதன் பேரில் வந்த கல்வித்துறை அதிகாரி விசாரணை நடத்தினர்.
அப்போதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் நேற்று புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கணக்குப்பதிவியல் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.