ராமநாதபுரம் அருகே கிராம கோயிலில் பெயர்த்து எடுக்கப்பட்டு, திருடி செல்வதற்காக புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டன.
புதுக்குளம் கிராம காட்டு பகுதியிலுள்ள கோயிலில் 20க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் உள்ளன.
மர்ம நபர்கள் யாரோ பீடங்களில் இருந்து சிலைகளை இரவு நேரத்தில் பெயர்த்து எடுத்துள்ளனர். அதற்குள் விடிந்து விட்டதால், புதரில் சிலைகளை மறைத்து வைத்து சென்றுள்ளனர்.