காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டியால் சக மாணவியின் தாயால் 8ம் வகுப்பு மாணவன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி மருத்துவ குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் படி, விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகிய 2 அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்