செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

400 அப்பாவி பெண்களை கதற விட்டு வில்லங்கன் எடுத்த விபரீத வீடியோ..! பொள்ளாச்சியை மிஞ்சும் சம்பவம்

Sep 07, 2022 11:10:44 AM

சேலத்தில் சினிமா எடுப்பதாக கூறி பெண்களை மிரட்டி  ஆபாசம் படம் எடுத்த சம்பவத்தில் ஏமாற்றப்பட்ட பெண்கள் காவல்துறையில் புகார் அளிக்க பிரத்யேக புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர் சினிமா எடுப்பதாக கூறி ஆபாசப் படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் வேலை பார்த்த ஜெயதேவி என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வேல் சத்ரியன் பயன்படுத்திய ஸ்டூடியோவை காவல்துறையினர் திறந்து பார்த்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் லேப்டாப்புகள் ,
கேமரா, ஹார்ட் டிஸ்க், செல்போன்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர சில ஆபாச வீடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்கள் சிலர் கதறி அழுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோக்களில் இருந்தன.

பெண்கள் நிர்வாணமாக இருப்பதைப் போன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.

இந்த வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசாரின் விசாரணையில், சுமார் 400க்கும் மேற்பட்டோர் தங்களை சினிமாவில் சேர்த்துவிட விருப்பம் தெரிவித்து வேல் சத்ரியன் சினிமா கம்பெனியில் ஒப்பந்தம் செய்துள்ளனர் .
இவர்களில் பலர் முன்பணமும் செலுத்தியுள்ளனர் .

வேல் சத்திரியன் எவ்வளவு முன் பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளார் என்றும் விசாரணை நடந்து வருகிறது

இது தவிர வேல் சத்ரியன் நோபல் கிரியேஷன்ஸ் (Nobel Creations)என்ற சினிமா கம்பெனி நடத்தி இதில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்து பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அந்த பெண்களை சினிமாவில் சேர்த்து விடாமல் மிரட்டி வந்து உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதில் ஏமாந்த பெண்கள் யார்? யார்? என்றும் தற்போது விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில், வேல் சத்ரியனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மற்றும் வேறு ஏதாவது வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தவர்கள் உடனடியாக சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தெரிவித்துள்ளார்.

அல்லது 98943 55193என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம். என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement