சேலத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்த மழை நீரில் மூழ்கி இரு மூதாட்டிகள் உயிரிழந்தனர்.
ஏற்காட்டில் இருந்து வரும் மழைநீர் சேலம் நான்குரோடு அருகேயுள்ள பிரதான ஓடையில் திறந்து விடப்படும் நிலையில், நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் கோவிந்த கவுண்டர் தோட்டம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
இதில் மழைநீரில் மூழ்கி இருமூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின.