சென்னை அருகே கொலை வழக்கில் சிறைசென்று திரும்பிய பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் காய்கறி மார்கெட்டிற்கு சென்று கொண்டிருந்த 'ஓலை' சரவணனை, வழிமறித்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், 'ஓலை' சரவணன் சிறை தண்டனை அனுபவித்து 3 மாதங்களுக்கு முன்வெளியே வந்தார். இந்நிலையில், முன்விரோத பகையில் பழிக்குப் பழியாக கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.