சென்னையில், காலை பணிக்கு வரும்போதே மது போதையில் தள்ளாடியதாகக் கூறப்படும் காவல் உதவி ஆய்வாளரை, பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் பத்திரமாக காவல் நிலையம் அழைத்து வந்தார்.
காசிமேடு N4 காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாக பணியாற்றுபவர் சற்குணம். 2 நாட்களாக பணிக்கு வராத சற்குணம், காலை 9 மணியளவில் பணிக்கு வரும் வழியில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
போதை தலைக்கேறியதால் புல்லட் வாகனத்தை நகர்த்தக்கூட முடியாமல் தள்ளாடியவரை அருகிலிருந்த பஞ்சர் கடை ஊழியர் பத்திரமாக காவல் நிலையம் அழைத்து வந்துவிட்டார்.
அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.