செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ரெயிலில் ருசியான பிஸ்கட் மயங்கிய நபர்களிடம் 30 செல்போன்கள் அபேஸ்..! நல்லா இருக்குடா உங்க டெக்னிக்

Sep 01, 2022 09:09:43 AM

திருப்பூரில் வீடு எடுத்து தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்து வந்த வட மாநிலக் கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

திருப்பூருக்கு வேலைதேடி இரயில் நிலையத்தில் வந்திறங்கும், வடமாநில இரயில் பயணிகளை குறிவைத்து, மர்ம நபர்கள் நட்பு ரீதியாக பேச்சுக் கொடுத்து மயக்க மருந்து தடவிய கிரீம் பிஸ்கட்டுகள் , டீ , குளிர்பானங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு கொடுத்து அவர்கள் சாப்பிட்டு மயங்கியவுடன் செல்போன்,பணம், உடைமைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்கள் கடந்த வாரத்தில் திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்துள்ளன.

இதுகுறித்து திருப்பூர் இருப்புப் பாதை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், காவல் ஆய்வாளர் பிரியாசாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள பேக்கரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களின் சிக்னல்களை சைபர்செல் போலீசின் உதவியுடன் சேகரித்த போலீசார் சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று திருப்பூர் இரயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே, மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் சம்பவத்தில் ஈடுபட்டதாக, பீகார் மாநிலம் ஆரரியா மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் மன்வார் ஆலம், முகமத் ஆசாத், அப்துல்லா, மக்முத் ஆலம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் குன்னங்கல் பாளையம் அருகில் உள்ள சூரியா காலனியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பதும், அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டு,பிஸ்கட்டில் மயக்க மருந்து தடவி கொடுத்து ரயில் நிலையம் மற்றும் காதர் பேட்டை பகுதிக்கு வரும் வட மாநிலத்தவரை குறி வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இவர்கள் பீகாரில் இருந்து இங்கு வரும்போதே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி வாங்கி வந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திருடிய பணத்தை கொண்டு தங்களுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து 30 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கிய பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரெயில் நிலையம் மட்டும் அல்ல, பேருந்து நிலையம் உள்ளிட்ட எந்த இடத்திலும் அறிமுகம் இல்லாதவர் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி உண்பதை தவிர்ப்பது உடலுக்கு மட்டும் அல்ல உடன் எடுத்துச்செல்லும் மதிப்பு மிக்க பொருட்களுக்கும் நல்லது


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement