பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும், 2028ஆம் ஆண்டிற்குள் புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அடுத்த 35 ஆண்டுக்கான விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டிற்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையிலும் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.