செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒண்டியாக சென்று சாதித்த ஒண்டிவீரன்.. முதல் சுதந்திர முழக்கமிட்ட மாவீரன்.!

Aug 20, 2022 06:33:33 AM

தென் தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் சுதந்திர போராட்ட வீர முழக்கமிட்ட ஒண்டி வீரனின் பெருமைகளை போற்றும் வகையில் மத்திய அரசு நாளை நினைவுத்தபால் தலை வெளியிடுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு....

தற்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள நெற்கட்டான் செவ்வயல் கிராமத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த செல்லையா - பகடை கருப்பாயி தம்பதியினரின் எட்டு குழந்தைகளில் கடைசிக் குழந்தையாக பிறந்தவர் தான் ஒண்டி வீரன்.

இவரது இயற்பெயர் முத்து வீரன். ஆனால், எதிரிகளை தன்னந்தனியாக எதிர்கொண்டு வீழ்த்தும் வல்லமை பெற்று விளங்கியதால் அவருக்கு ஒண்டி வீரன் என்ற பெயர் ஏற்பட்டது.

கிபி 18 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற மன்னனாக திகழ்ந்த பூலித்தேவனின் நம்பிக்கைக்குரிய படைத் தளபதியாக திகழ்ந்த ஒண்டி வீரன், பூலித்தேவனின் போர்வாள் என்று போற்றப்பட்டார். 1755 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பிடம் இருந்து நெல்லை சீமையில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றனர்.

இதனை எதிர்த்து வீர முழக்கமிட்ட ஒண்டி வீரன், ஆற்காடு நவாப்பின் படையையும், தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனியின் படையையும், நெற்கட்டான் செவ்வயல் கிராமத்தில் வைத்து போரிட்டு விரட்டியடித்தார்.

1757முதல் 1759 ஆம் ஆண்டுவரை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவாளர்களை எதிர்த்து கங்கைகொண்டான், ஆழ்வார்குறிச்சி, நெற்கட்டான் செவ்வயல், ஊத்துமலை, சுரண்டை, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்ற போர்களிலும் ஒண்டி வீரன் தலைமையிலான படை எதிரிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

நாட்டின் 75 விடுதலை பெருவிழாவை முன்னிட்டு, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்தி வரும் மத்திய அரசு, ஒண்டி வீரனின் புகழை போற்றும் வகையில், ஒண்டிவீரனின் மணி மண்டபம் அமைந்துள்ள, பாளையங்கோட்டையில் நாளை நினைவு தபால் தலை வெளியிடுகிறது.

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement