செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Aug 15, 2022 08:10:34 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் தனது கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மலேசியாவில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவர் 13 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார். அரசுக்கு உதவியாக அள்ளிக்கொடுத்த நல்ல உள்ளம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, பூலாம்பாடி, கடம்பூர், புதூர், அரசடிகாடு, மேலகுணங்குடி ஆகிய பகுதிகள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் பின் தங்கிய பகுதிகளாக காட்சி அளிக்கின்றது.

பூலாம்பாடி பேரூராட்சியில் உள்ள 5 கிராமங்களை உள்ளடக்கிய, 15 வார்டுகளில், 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் அங்கு சாலை வசதி,குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.

அதே போல் மலையடிவார பகுதியான அரசடிகாடு பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூட இயலாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த ஊரில் பிறந்து மலேசியாவில் தொழிலதிபராக விளங்கும் டத்தோ பிரகதீஸ்குமார் என்பவர் ஊருக்கு திரும்பிய நிலையில் தன்னை வளர்த்த ஊர் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி பின் தங்கி இருப்பதை கண்டார்.

சிவாஜி பட ரஜினி போல நிஜத்தில் பொதுமக்களின் சிரமங்களை போக்க தனி ஒருவனாக களமிறங்கினார் தொழில் அதிபர் பிரகதீஸ்குமார்.

அரசு அதிகாரிகளை சந்தித்த அவர் பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரச்சொல்லி கோரிக்கை விடுத்ததோடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்மடுத்த எவ்வளவு நிதி தேவைப்படும்? என்று கண்டறிய சொன்னதோடு, அதற்கான தொகையை தானே செலவிடுவதாகவும் தெரிவித்தார்.

அதிகாரிகளின் ஆய்வின் முடிவில் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெதுவதற்காக, பொதுமக்களின் பங்களிப்பு தொகையுடன், நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தான் பிறந்த மண்ணின் மக்களுக்காக டத்தோ பிரகதீஸ்குமார் தனது ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் 13 கோடி ரூபாயை தனி ஒருவனின் பங்களிப்பு தொகையாக அள்ளிக் கொடுப்பதாக அறிவித்தார்.

இதன்மூலம் பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்குவசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார் தனது பங்களிப்பு தொகையாக 90 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், மலேசிய நாட்டு துணை தூதர் சரவணண், பூலாம்பாடி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர திரு நாளில் கிராமங்களின் முன்னேற்றம் குறித்து காந்திஜி கண்ட கனவை நனவாக்க சொந்தப்பணத்தை மக்கள் பணிகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ள வள்ளல் பிரகதீஸ்குமார் போன்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் .


Advertisement
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement