செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

காவிரியில் 2.3 இலட்சம் கன அடி நீர்... கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின

Aug 04, 2022 01:18:45 PM

கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்குக் காவிரியாற்றில் நீர்வரத்து நொடிக்கு இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 68 ஆயிரத்து 100 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 83 ஆயிரத்து 100 கனஅடி நீர் காவிரியில் பாய்கிறது.

 

இத்துடன் கர்நாடக அணைகளுக்குக் கீழ் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் தமிழகத்துக்கு நண்பகல் நிலவரப்படி நொடிக்கு இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் தடுப்பு வேலிகளையும் மூழ்கடித்து ஆறு முழுவதும் பரந்து விரிந்து வெள்ளம் பாய்கிறது.

 

காவிரியில் நீர்வரத்துத் தொடர்ந்து உயரும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் இன்று முற்பகல் 11 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2 இலட்சத்துப் 10 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையில் இருந்து சுரங்க மின் நிலையம், 16 கண் மதகுகள் ஆகியவற்றின் வழியே இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் இந்திரா நகரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாதுகாப்புக் கருதி இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement