செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தீரன் சின்னமலை நினைவுநாள் தலைவர்கள் மரியாதை.!

Aug 03, 2022 02:20:09 PM

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217ஆவது நினைவுநாளையொட்டி அவரது உருவச் சிலைக்குத் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத தீரன் சின்னமலை, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டுவதற்காகத் தொடர்ந்து போரிட்டு வெற்றிபெற்று வந்தார். சின்னமலையைப் போரில் வெல்ல முடியாது எனக் கருதிய ஆங்கிலேயர்கள் வஞ்சகமாக அவரைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.

அதன் 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்குத் தமிழக ஆளுநர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை உருவச் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

தீரன் சின்னமலை உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சிச் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

சேலம் மாவட்டம் சங்ககிரிக் கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சங்ககிரியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், செம்மலை ,சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement