செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போடுரா தம்பி பூட்டை.. தூக்குடா தம்பி பணத்தை.. ஜலாம் சிங்கிற்கு சலாம்..! களவாணி களை மடக்கிய காவலர்

Aug 01, 2022 09:39:57 PM

கடை உரிமையாளரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு, கடையில் இருந்து 7 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி நாணயங்களை   கொள்ளையடித்து சென்ற கடை ஊழியரை   இரவு ரோந்து காவலர் மடக்கிப்பிடித்த சம்பவம் சென்னை சவுகார்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.

சென்னை சவுக்கார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜாலம் சிங். பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபார கடை வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாலம் சிங், கடந்த எட்டு வருடமாக இந்த பகுதியில் கடை நடத்தி வரும் நிலையில் 10 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானை சேர்ந்த ராஜாராம் என்ற இளைஞரை தனது கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார். ஊழியர் ராஜாராம் தங்குவதற்கு தனது வீட்டிலேயே ஒரு அறையும் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலையில் மூட்டை முடிச்சுகளுடன் கதனது உறவினருடன் சென்ற ராஜாராமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சஜீவ் என்பவர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்.

தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் செல்வதாக கூறி உள்ளனர். அவர்கள் எடுத்துச்சென்ற பைகளை சோதித்த போது அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களும் வெள்ளி பொருட்களும் இருந்தது.

காவலரிடம், இது வசூல் பணம் என்று சொல்லி சமாளித்தனர். இந்த வேலையில் வசூல் பணம் கொடுத்து அனுப்புவது யார் ? என்று கேட்க இந்தியில் ஒருவரிடம் பேசிவிட்டு காவலரிடம் செல்போனை கொடுத்துள்ளனர். அந்த நபரும் இந்தியில் தனது பணம் என்று கூறி உள்ளார்.

சந்தேகம் தீராததால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றபோது கையை தட்டிவிட்டு தப்பி ஓடிய இருவரையும் , காவலர் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தார்.

தன் மீது நம்பிக்கை வைத்து வீட்டில் தங்குவதற்கு அனுமதி கொடுத்த ஜலாம் சிங்கிற்கு திருட்டு புத்தியால் சலாம் போட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

ஜலாம் சிங் , தினமும் கடையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களை வைத்து செல்வதை நோட்டமிட்ட ராஜாராம்,
சம்பவத்தன்று நள்ளிரவு ஜலாம் சிங் குடும்பத்தினருடன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு தெரியாமல் கடையின் சாவியை எடுத்துள்ளான்.

ஜலாம் சிங்கின் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டு போடு பூட்டிவிட்டு, கடைக்கு சென்று பணம் மற்றும் வெள்ளி பொருட்களை களவாடிக் கொண்டு சொந்த ஊருக்கு தப்பிச்செல்ல முயன்று போலீசில் சிக்கியது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 200 கிராம் வெள்ள நாணயங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில் மேல் வீட்டார் உதவியுடன் , பூட்டை உடைத்து கதவை திறந்து வெளியே வந்த ஜலாம் சிங், தனது கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பதற்றத்துடன் பூக்கடை காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச்சென்ற ஜலாம் சிங் , அங்கு நின்றிருந்த ரோந்து காவலர் சஜீவ்விடம் கொள்ளை குறித்து புகார் அளிக்க , அவரோ கொள்ளையர்களை இரவோடு இரவாக பிடித்தாகிவிட்டது என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளையன் ராஜாராமுடன் அவரது சகோதரர் பீக்காராமையும் கைது செய்த போலீசார், புதிய நபர்களுக்கு தெரியும்படி பணபரிவர்த்தனை மேற்கொள்வதும், வீட்டிலேயே தங்குவதற்கு அனுமதிப்பதும் தவறு என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

அதே நேரத்தில் கொள்ளை நடந்த ஒரு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை மடக்கிய ரோந்து காவலர் சசீவை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement