செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மனைவியை சமாளிக்க செத்து செத்து விளையாடும் செஞ்சிக் கோட்டை வாலிபர்..!

Jul 31, 2022 01:04:30 PM

எடுத்ததற்கெல்லாம் கையையும் கழுத்தையும் அறுத்துக் கொண்டு அடம்பிடித்த கணவன் மீது மனைவி கொதிக்கும் ரசத்தை ஊற்றிய நிலையில், மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சி அருகே நடந்துள்ளது.

வரம் வாங்கி வந்த மாமுனி போல காவல் நிலைய வாசலில் நனைந்த நிலையில் அமர்ந்திருக்கும் இவர் தான் அட்டாக் நடராசன்..!

கோபம் வந்தால் தன்னை தானே துன்புறுத்திக் கொள்வதை கொள்கையாக கொண்ட நடராசன், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பபிரச்சனை காரணமாக செஞ்சி நான்கு முனை சந்திப்பில் நின்று தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பினார்

மருத்துவ மனையில் இருந்து வீடுதிரும்பிய சில தினங்களில், செஞ்சி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில் விற்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டும் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார், 3 குழந்தைகளின் தந்தையான இந்த செஞ்சிக் கோட்டை வாலிபர்..!

கடந்த 18-ஆம் தேதி மீண்டும் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நடராசனுக்கு பதில் அவரது மனைவி முந்திக் கொண்டார். வாக்கு வாதம் முற்றி நடராசன் கையில் பிளேடை எடுப்பதற்கு முன்பாக அவரது மனைவி ஆவேசமாகி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை எடுத்து நடராசன் மீது ஊற்றியதால் அவர் பலத்த காயம் அடைந்தார்

மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையில் லேசாக காயங்கள் ஆறிய நிலையில் மனைவி மீது செஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த நடராசன், தன் மீது அடுத்த அட்டாக்கிற்கு தயாரானார்.

போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடராசன் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்றார்.

போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை நமத்துப் போகச்செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அட்டாக் நடராசன் எழுந்து சென்று போதையில் காவல் நிலையத்திற்கு திரும்பி வந்து மதுப்பாட்டில் ஒன்றை உடைத்து கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றதால்.. மறுபடியும் முதலில் இருந்தா ? என்று புலம்பும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.

செத்து செத்து விளையாடுவது நடராசனுக்கு பொழுது போக்காக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவரை மீட்டு காப்பாற்றுவதற்காக போலீசார் படாத பாடு படுவதால், பொறுப்பான பல பணிகள் பாதிக்கப்படுவதாக குமுறுகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement