செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை – திருச்சி சாலையில் துண்டாகி ஆடிய பாலம்… போக்குவரத்து மாற்றம்..!

Jul 29, 2022 01:40:38 PM

சென்னை திருச்சி விரைவுச் சாலையில் ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பழைய ஆற்று பாலம் துண்டாகி மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னை - திருச்சி விரைவுச்சாலையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 24 மணி நேரமும் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படும்.

இந்த சாலையில் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட போது, இதற்காக முக்கிய சந்திப்புக்களில் மேம்பாலங்களும், சாலையின் குறுக்கில் செல்லும் ஆற்றுப்பகுதியில் புதிய பாலங்களும் கட்டப்பட்டன.

இதே போன்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்ட எல்லையான திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே ஆற்றின் குறுக்கில் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருபது அடியில் நான்கு கான்கிரீட் ஆற்றுப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் சென்னை - திருச்சி மார்க்கத்தில், புதன்கிழமை சென்ற வாகனங்கள் அந்த பழைய பாலத்தை கடந்த போது அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பாலம் இரண்டாக உடைந்து மேலும் கீழுமாக ஆடியபடி இருந்தது. இது குறித்து செய்தி வெளியானதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரோந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டதால், பாலம் சேதமடைந்து, வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள் இந்த பாலம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் தற்போது இந்த பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இந்த பாலம் புதிதாக கட்டப்பட்ட போது கான்கிரீட் தளத்தின் கீழ் பகுதியில், மேலே செல்லும் வாகனங்கள் வேகமாகச் சென்றாலும் அதிர்வுகள் ஏற்படாத வகையில் ரப்பர் பேரிங் பேட் (rubber bearing pad) போன்ற அமைப்பு ஸ்ப்ரிங் முறையில் பொருத்தப்பட்டிருந்தது. இது நாட்கள் கடந்ததாலும், அதிகளவில் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்வதாலும் இவை சேதமடைந்து பாலம் பிரிந்து ஆடுவது போல அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பாலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை முறையாக மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பாலத்தின் கீழே உள்ள தூண்களில் வளர்ந்துள்ள மரங்கள் பெரிய அளவில் வளரும் பட்சத்தில் பாலத்தில் விரிசல் ஏற்படும் என்றும் வெளிப்பக்கம் மட்டும் வெள்ளையடித்துச் செல்லும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே பாலம் சேதமடைந்ததற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டினர்.

சேதம் அடைந்த பாலத்தை ஹைட்ராலிக் முறையில் கான்கிரீட் பகுதியை உயர்த்தி அடிப்பக்கத்தில் அந்த ரப்பர் பேரிங் பேடை பொருத்தும் பணி தொடங்குவதாகவும், குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு மேல் இப்பணி நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சேதம் அடைந்த அப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் உள்ள பாலத்தில் இருவழி பாதையாக வாகனங்கள் கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், அப்பகுதியில் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், ஒலக்கூர் போலீசார் பேரி கார்டுகள் அமைத்து, வாகன ஓட்டிகளை மெதுவாக செல்வதற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் இருக்கும் சேதமடைந்த ஆற்றுப் பாலத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட எஸ்.பி ஸ்ரீ நாதா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மோகன், பாலத்தின் பராமரிப்பு பணிகள் 15 நாட்களுக்குள் முடிவடைந்து சோதனை ஓட்டத்திற்கு பிறகு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார். 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement