மதுரை பெத்தானியாபுரத்தில் ஜிஎஸ்டி வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளிடம் நிதி இல்லையென்றால், மக்களின் வரி பணத்தை ஊழல் என்ற பெயரில் திருடிய அமைச்சர்களிடம் இருந்து மீட்டு ஆட்சியை நடத்த வேண்டும் என்றார்.