செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கணியாமூர் வழக்கு-மாணவி உடலைப் பெறப் பெற்றோர் ஒப்புதல்

Jul 22, 2022 09:05:11 PM

கணியாமூர் பள்ளி மாணவி உடற்கூறாய்வு அறிக்கைகளைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வல்லுநர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்ளவும், மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்கவும் பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கணியாமூர் மாணவியின் உடலைப் பெற்றோர் வாங்க மறுப்பதாகக் கூறி நீதிபதி சதீஷ்குமார் முன் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் வல்லுநர் செல்வக்குமார் ஆஜராகி, இரண்டாவது முறை உடற்கூறாய்வில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் இரக்கம் கொள்வதாகத் தெரிவித்த நீதிபதி, உடலைப் பெற்றுக்கொள்ளத் தாமதம் ஏன்? என வினவினார்.

ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை ஏற்படுத்தாமல், அமைதியான தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியதுடன், மகளின் உடலை வைத்துப் பெற்றோர் பந்தயம் கட்டக்கூடாது எனத் தெரிவித்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தபோது, அதுகுறித்துத் தமிழக முதல்வர் ஆலோசித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுவதாகவும், அது மனுதாரருக்குத் தெரியாமலேயே நடந்துள்ளதாகவும் கூறிய நீதிபதி, மாணவி மரணம் தொடர்பாகச் சமூக ஊடகங்கள் முழுவதும் பொய்ச் செய்தியைப் பரப்பி உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர் ஆகியோர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அறிக்கைகளையும் வீடியோ பதிவுகளையும் ஜிப்மர் மருத்துவமனையிடம் ஒப்படைக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மாணவியின் உடலை நாளைக் காலை பெற்றுக்கொள்ளவும், மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்கவும் பெற்றோருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து மகளின் உடலை நாளைக் காலை பெற்றுக்கொள்ளவும், மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்கவும் பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.

இதனிடையே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தபடி மாணவியின் தாயார் நாளை காலை உடலை வாங்குவார் என நம்புவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் சரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.

கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஆய்வு செய்தபின் பேட்டியளித்த அவர், பள்ளியை மீண்டும் திறக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், வன்முறையில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு முகாம்கள் அமைத்து அவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement