செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வரதட்சணையாக 105 சவரன், 5 லட்சம் ரொக்கம் - கட்டில் ஒரு டொயோட்டா சொகுசு கார்..! டுபாக்கூர் பேராசிரியர் கைது..!

Jul 16, 2022 06:19:48 PM

ஐஐடி பேராசிரியர் என ஏமாற்றி பெண் மருத்துவரை திருமணம் செய்து 5 லட்சம் ரூபாய் ரொக்கம், 105 சவரன் நகை, டொயோட்டா காருடன் வாழ்க்கையை சூறையாடிய, ஏற்கனவே திருமணமான டிபன்கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினர் மும்பையில் வசித்து வந்துள்ளார்.உறவினர்கள் மூலம் வரன் பார்த்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி யில் வேதியல் துறை பேராசிரியர் என்று கூறப்பட்ட பிரபாகரனுடன் திருமணம் நடந்துள்ளது. மணமகள் சென்னை மாநகராட்சி ஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

திருமணத்தின் போது வரதட்சணையாக 105 சவரன் நகை, டொயோட்டா கார், மணமகனுக்கு 6 சவரன் செயின், மோதிரம், ஐந்து லட்சம் ரொக்கம், 5 லட்சம் மதிப்புடைய கட்டில் உட்பட ஏராளமான சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக வாங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஜாபர்கன்பேட்டை பகுதியில் வசித்து வந்தனர். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பிரபாகரன் , பெண் மருத்துவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பெண் மருத்துவரை கத்தியால் தாக்கி கொடுங்காயத்தை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் பிரபாகரனின் லேப்டாப்பில் அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதற்கு ஆதாரமான ஈமெயில் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர், அவரது சகோதரருடன் சேர்ந்து அந்தப் பெண் குறித்த விபரங்களை விசாரித்த போது அவர் பெயர் ஷியாம சுந்தரி என்பதும் அவருக்கும் பிரபாகரனுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டே திருமணம் நடந்து வேளச்சேரியில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வருவதும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சென்னை ஐஐடிக்கு சென்று பெண் மருத்துவரின் குடும்பத்தினர் விசாரித்த போது ஐஐடியில் ஆராய்ச்சி படிப்புக்காக விண்ணப்பித்ததோடு சரி, அதன் பிறகு பிரபாகரன் வகுப்புக்கும் வரவில்லை, அவர் பேராசிரியர் என்பதெல்லாம் சுத்த பொய் என தெரிவித்துள்ளனர்.

வரதட்சணையாக வாங்கிய 105 சவரன் நகைகளை வீட்டிலிருந்து திருடி சென்று அதில் 30 சவரன் நகையை முதல் மனைவி சியாம சுந்தரியிடம் கொடுத்ததோடு, மீதம் உள்ள நகைகளை அடகு கடையில் வைத்து தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நடத்தி வந்த டிபன் கடையை ஓட்டலாக மாற்றி இருப்பது தெரியவந்தது.

மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, வரதட்சணையாக கிடைக்கும் நகை பணத்துக்காக பெண் மருத்துவரை திருமணம் செய்து வைத்த பிரபாகரன் குடும்பத்தினர் மோசடிக்கு மூல காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக் நகர் மகளிர் போலீசார் டுபாக்கூர் பேராசிரியர் பிரபாகரன், அவரது தந்தை விஸ்வநாதன், தாய் மஞ்சன்னை, சகோதரர் கண்ணதாசன், சகோதரரின் மனைவி வனிதா மற்றொரு சகோதரர் நெப்போலியன் ஆகிய ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீதும் மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

பிரபாகரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவான பிரபாகரனின் குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.

 


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement