அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும் விரைவில் அவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், 11 லட்சம் மடிக்கணினிகள் வழங்க வேண்டிய நிலை உள்ளதால், அதற்கான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாக கூறினார்.