செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏமாற்றிய ஆண்நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்திய பேராசிரியை..!

Jul 15, 2022 11:31:06 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆண் நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த பேராசிரியை கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ரதீஷ்குமார் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மதியம் 3 மணி அளவில் பதிவேட்டு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரதீஷ்குமாரை பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரின் விசாரணையில், முறையற்ற காதல் விவகாரத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமார் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த திருமணமான ஷிபா என்ற பெண்ணுடன் எல்லை மீறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் அளித்த உறுதிமொழியை நம்பிய ஷிபா, கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து இருந்துள்ளார்.

ஆனால், ரதீஷ்குமாரோ அவருக்குத் தெரியாமல் கடந்த ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
தகவல் அறிந்த ஷிபா தன் வாழ்க்கையை சீரழித்த ஆத்திரத்தில் ரதீஷ்குமாரை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷிபாவை கைது செய்தனர். விசாரணையில், தான் கொண்டு வந்த தூக்க மருந்து கலந்த உணவை உண்டு ரதீஷ் மயக்க நிலையை அடைந்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் அவரது உடலில் 30 இடங்களில் குத்தியதாகவும் ஷிபா தெரிவித்துள்ளார்.

ரதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீசை வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறி தாம் சரண் அடைந்ததாகவும் ஷிபா கூறியுள்ளார்.


Advertisement
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement