செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிளீஸ் சார் பொண்ணுங்களை திட்டாதீங்க.. தன் உயிரை மாய்த்து உரக்க சொன்ன மாணவி..!

Jul 15, 2022 07:49:50 AM

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் அந்த மாணவி எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி மாணவியின் தந்தை ராமலிங்கம் தாய் செல்வி மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்

மாணவியின் சடலத்தில் பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் கொல்லப்பட்டதாக மாணவியின் தாய் குற்றஞ்சாட்டினார்.

இதற்க்கிடையே மாணவி பயன்படுத்திய நோட்டு புத்தகங்களை ஆய்வு செய்த போது அதில் மாணவி கல்லூரி தாளாளர் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

தனக்கு வகுப்பு எடுக்கும், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை ஆகியோர் தன்னை படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருப்பதாக கூறி மற்ற மாணவர்கள் முன்னிலையில் கண்டித்தனர் என்றும் இது தனக்கு பெருத்த அவமானமாக இருந்ததால் இந்த முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டதாகவும், தயவு செய்து மாணவிகளை இப்படி பேசாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அந்த மாணவி.

மேலும் தனது பள்ளிக் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை தனது பெற்றோரிடம் கொடுத்துவிடும் படியும், தனது தோழிகளிடமும், பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்

இதற்க்கிடையே மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

மாணவியின் பெற்றோர் தெரிவித்த குற்றசாட்டுகள் குறித்து விளக்கம் கேட்ட போது, சக்தி பள்ளியின் நிர்வாகி ரவிக்குமார் தான் மீண்டும் அழைப்பதாக கூறி செல்போன் அழைப்பை துண்டித்தார்


Advertisement
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி
ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement