செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாதியில் தவித்த பயணிகள்.. அரசுப் பேருந்து கண்ணாடியை உடைக்கச் சொன்ன ஓட்டுனர்..! போலீஸ் வந்ததால் பயணம் தொடர்ந்தது

Jul 14, 2022 08:34:47 AM

சிதம்பரத்திலிருந்து ஆண்டிமடம் செல்லும் பேருந்து சேத்தியாத்தோப்போடு நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பயணிகள், பேருந்தை சிறைப்பிடித்து உரிமைக்குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக ஆண்டிமடம் செல்லும் அரசுப் பேருந்து சம்பவத்தன்று இரவு 10.30 மணி அளவில் சேத்தியாதோப்பு வந்தது.

அந்தப் பேருந்து ஆண்டிமடம் செல்லாமல் மீண்டும் சிதம்பரம் செல்ல முயன்றது. இதனால் ஆண்டிமடம் செல்லும் வழியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அரசுப் பேருந்தை சிதம்பரம் திரும்பிச்செல்ல விடாமல் சேத்தியாத்தோப்பில் சிறைப்பிடித்தனர்.

30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தை ஆண்டிமடம் நோக்கி இயக்க கோரிக்கை வைத்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளரிடம் பேசிவிட்டோம் என்று ஓட்டுனரிடம் தெரிவித்த பயணிகளிடம் உங்களால் என்ன செய்யமுடியும், பேருந்துக் கண்ணாடியை உடைக்க முடியுமா? என்று எகத்தாளமாக கேட்டபடி நின்றார் ஓட்டுனர்.

ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மகளிருக்கான கட்டணமில்லா 13 நம்பர் பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டதால் இந்த பேருந்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் தனது குழந்தைகள் தனக்காகக் காத்திருப்பதாகவும் கூறி பெண் ஒருவர் ஆவேசமானார்.

நேரம் நீண்டு கொண்டே சென்ற நிலையில் காவல்துறையினர் வந்து பெண் பயணிகளின் நலன் கருதி பேருந்தை ஆண்டிமடத்துக்கு இயக்க அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

சிதம்பரத்திலிருந்து - சேத்தியாத்தோப்பு வழியாக ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளை இரவு நேரங்களில் மீண்டும் இயக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Advertisement
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement