செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

படிக்கிறத தவிர எல்லா சேட்டையும் இங்கே தான் ஆரம்பம்..! சாதி பிரச்சனையால் உருவான மோதல்..!

Jul 14, 2022 07:18:30 AM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை, ஊருக்குள் வந்து இரு தரப்பு மோதலாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட வாய் தகராறை அடுத்து, இரு பிரிவாக சண்டையிட்டுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

இந்த தகவல் வேலங்காடு மற்றும் கயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியவந்த நிலையில் வேலங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் , கயப்பாக்கம் கிராமத்திற்கு தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் ஊருக்குள் புகுந்த எதிர்தரப்பினரை தடுப்பதற்காக பெண் ஒருவர் இளைஞரின் சட்டையை பிடித்து கடுமையாக சண்டையிட்டார். அந்தப்பெண்ணுக்கு ஆதரவாக உள்ளூர் சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் கையில் மரக்கட்டைகளை எடுக்க அவர்களை எதிர்தரப்பினர் அடித்து விரட்டினர்

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட நிலையில் அந்த கிராமத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிந்து மோதலில் ஈடுபட்டவர்களை வீடியோவை ஆதரமாக கொண்டு தேடி வருகின்றனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இரு கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் பள்ளியில் படிப்பதை தவிர, மற்ற விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவதால் இது போன்ற வீணான மோதல்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement