செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாயின் வாய்க்கு சங்கிலி பூட்டு போட்டு விட்ட விபரீத வில்லன்கள்..! போராடி மீட்ட சம்பவம்..!

Jul 10, 2022 07:52:41 AM

சம்பளமில்லா காவலாளியாக இரவு பகலாக வீதியை காக்கும் நாய் ஒன்றை பிடித்து விபரீத எண்ணம் கொண்ட சிலர் அதன் வாயை இரும்பு சங்கிலியால் கட்டி வீதியில் பசியோடு அலையவிட்ட சம்பவம் சாத்தான்குளம் அருகே அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடம் கிராமத்தில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு வீட்டையும், வீதியையும் காவல் காத்த நாய் ஒன்றின் வாய் சங்கிலியால் கட்டி பூட்டுப் போடப்பட்ட நிலையில் பரிதாபமாக வலம் வந்தது.

வாய் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததால் வாய் நிறைய சாப்பிட முடியாமல் கிடைத்ததை கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீதியில் சுற்றி திரிந்தது

இதனை பார்த்த நல்லுள்ளம் கொண்ட இளைஞர்கள் சிலர் சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கடைவீதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு நொறுக்கு தீனி போட்டு தங்களிடம் வரவைத்தனர்.

அந்த நாய் நொறுக்கு தீனியை சாப்பிட எத்தனித்துக் கொண்டிருந்த தருணம் தீயணைப்பு வீரர் ஒருவர் அந்த நாயின் பின்பக்கமாக சென்று இரு கால்களையும் பிடித்து தூக்கி சுற்றி அதன் சீற்றத்தை குறைத்தார்

பின்னர் அருகில் நின்ற வீரர்கள் அந்த நாயின் முகத்தை சாக்கு கொண்டு மறைத்து பூட்டப்பட்ட சங்கிலியை கவனமாக வெட்டி அகற்றினர். சங்கிலிகளை அகற்றியதும் விட்டால் போதும் என்று அந்த நாய் அங்கிருந்து ஓடிச்சென்றது.

நாயின் வாய்க்கு இப்படி சங்கிலியால் பூட்டு போட்ட விபரீத வில்லன்களுக்கு இது போல பூட்டு போட்டு விட்டால் சித்ரவதையின் கோர முகத்தை உணர்வார்கள்.

வீதியை காக்கும் விசுவாசமிக்க காவலாளிகளான நாய்களுக்கு உணவு போடாவிட்டாலும் பரவாயில்லை...அதன் வாயை கட்டி துன்புறுத்தும் விபரீத செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டனர்.

அதே நேரத்தில் வெறிப்பிடித்த நாய்கள் தெருவில் சுற்றினால் அவற்றை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்..ஆனால் வாயை கட்டி பசியோடு அலைய விடுவது கொடுமை என்பதை சம்பந்தப்படவர்கள் உணரவேண்டும்.


Advertisement
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி
ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement