செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு.. 11-ந் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பு.!

Jul 08, 2022 10:08:53 PM

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடுத்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இரண்டாம் நாள் விசாரணையின்போது அதற்கு இபிஎஸ் வழக்கறிஞர் விஜய் நாராயண் பதிலளித்தார். அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும், ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழு கூட்டுவதற்கு 82 விழுக்காடு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

2017ஆம் ஆண்டுப் பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதாகத் இபிஎஸ் தெரிவித்தார். பொதுக்குழு அங்கீகாரம் பெறாததால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதால் அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேர் புதிய தலைமை வரும்வரை செயல்படுவார்கள் என இபிஎஸ் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமைக்கழக நிர்வாகிகள் வரும் 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிவித்தார்.

 

 ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென இடைக்காலப் பதில் மனுவில் இபிஎஸ் கோரியுள்ளார். 

 

ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவின் அடிப்படையில் தான் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றதாகவும், ஒட்டுமொத்தமாக உட்கட்சித் தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படிக் கூற முடியும்? என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் வினவினார். தலைவர்கள் இறந்தபோது தான் பதவி காலி எனக் கருத முடியும் எனத் தெரிவித்தார்.

 

இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து ஜூலை 11 காலை 9 மணிக்குத் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் நாள் காலை ஒன்பதே கால் மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குமுன் 9 மணிக்குத் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement