செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வேளாங்கண்ணியில் பாவம்... மனைவியின் 96 காதலனை கார் ஏற்றிக் கொன்ற கணவன்..! சினிமா பாணியில் சேசிங் மர்டர்

Jul 07, 2022 01:24:17 PM

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், '96' பட பாணியிலான மனைவியின் பள்ளிப்பருவ காதலனை கார் ஏற்றிக் கொலை செய்ததாக கணவனையும், கணவனை கூலிப்படை ஏவிக் கொல்ல முயன்றதாக மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள ஏஞ்சல் ரெசிடன்ஸி தங்கும் விடுதியின் உரிமையாளர் வினோத் விக்டர். இவரது மனைவி மரிய ரூபினா மார்ட்டினா. கடந்த வருடம் வினோத் விக்டர் வெளி நாட்டிற்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றதால், தங்கும் விடுதியை தனது மனைவியின் மூலம் அறிமுகமான திமுக பிரமுகர் மதன் கார்த்தி என்பவருக்கு விக்டர் லீசுக்கு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் மதன் கார்த்தி, மார்ட்டினாவைத் தேடி வீட்டிற்கு போக்கும் வரத்துமாக இருப்பதாக விக்டருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் மனைவிக்கு தெரியாமல் வைத்துச்சென்ற கேமரா காட்சிகள் மூலம் மதன் கார்த்தி வீட்டு வந்து சென்றதை உறுதிப்படுத்திய விக்டர் இது குறித்து கேட்டு தனது மனைவி மார்ட்டினாவிடம் சண்டையிட்டுள்ளார். விடுதி விவகாரம் தொடர்பாக வந்து சென்றதாக கூறி மனைவி மார்ட்டினா சமாளித்துள்ளார்.

இதையடுத்து விடுதியை திரும்பப் பெறும் திட்டத்துடன் விக்டர் ஊருக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் மதன் கார்த்தி விடுதியை காலி செய்ய மறுத்து தகராறு செய்ததோடு விக்டரையும் தாக்கி உள்ளார். இதில் விக்டர் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவர், சம்பவத்தன்று விக்டர் தனது காரில் மனைவி மார்ட்டினாவுடன் விடுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது வேளாங்கண்ணி சுனாமி ஸ்தூபி அருகே காரை மறித்த மதன் கார்த்தி தலைமையிலான 15 பேர் கொண்ட மர்ம கும்பல் கார் மீது பயங்கரமாக தாக்கி உள்ளது. ஓட்டுனர் இறங்கி ஓடிவிட்ட நிலையில் , ஓட்டுனர் இருக்கைக்கு மாறிய விக்டர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இருந்தாலும் அவர்களை விடாத மதன் கார்த்தி கூட்டாளியுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் விக்டரின் காரை 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மறித்துள்ளார். அதிவேகத்தில் வந்த விக்டர், தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக மதன் கார்த்தியையும் கூட்டாளியையும் காரால் அடித்து தூக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த மதன் கார்த்தி உயிரிழந்த நிலையில், கூட்டாளி அமுதன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் நடத்திய விசாரணையில் விக்டரை காரில் அழைத்து வருவதாக கூறி, கொலைக்கு திட்டம் வகுத்து கொடுத்ததே அவரது மனைவி மார்ட்டினா என்பது அம்பலமானது.

மதன் கார்த்தியும், மார்ட்டினாவும் 96 சினிமா பாணியிலான காதலர்கள் என்று கூறப்படுகிறது. பள்ளிப் பருவ காதலனுடன் சேர்ந்து வாழும் திட்டத்தில் தனது விடுதியை அவருக்கு லீசுக்கு கொடுக்கவைத்த மார்ட்டினா, தனது கணவர் வைத்த காமிராவில் கையும் களவுமாக சிக்கியதால் , கணவனை தீர்த்துக் கட்ட காதலன் மதன் கார்த்தியை ஏவி உள்ளார்.

முதல் தாக்குதலில் கணவர் தப்பிய நிலையில், 2 வதாக இவர்கள் திட்டப்படி கூலிப்படையினர் காரை மறித்தபோது ஓட்டுனர் ஓடிவிட, எதிர்பாராத திருப்பமாக, கணவர் விக்டரே காரை ஓட்டிச்சென்று மனைவியின் காதலன் மதன் கார்த்தியை தீர்த்துக் கட்டிய சம்பவம் அரங்கேறி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலை வழக்கில் கணவன் விக்டரையும் , கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய வழக்கில் மனைவி மார்ட்டினாவையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement