கிருஷ்ணகிரியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே ஒருவழிச்சாலையில் முன்னால் சென்ற பைக்கை முந்த முயன்ற போது எதிரே வந்த பள்ளி வாகனம் மீது மோதியதில் ஸ்கூட்டியில் வந்த பெண் உட்பட அவரது மகன், மகள் ஆகியோரும் தூக்கிவீசப்பட்டு காயம் அடைந்தனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
என்எஸ்கே நகர் பகுதியை சேர்ந்த பேபி என்ற பெண் தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று கொண்டிருந்த வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
காயமடைந்த மூவரும் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.