செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இது தாண்டா போலீஸ்.. உயிர் காக்கும் மருத்துவருக்கு நள்ளிரவில் உதவிய காவலர்..! எல்லாம் ஒரு வயது குழந்தைக்காக..!

Jul 02, 2022 12:02:54 PM

திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய காவலரின், தன்னலமற்ற சேவையை பாராட்டி கொழும்புவை சேர்ந்த தமிழ் மருத்துவர் தூத்துக்குடி போலீசுக்கு பாராட்டுக்கடிதம் எழுதி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்தவகையில் இலங்கையின் தலை நகரான கொழும்புவில் பிரசித்தி பெற்ற உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை நிபுணரான ராமசுப்பு என்பவர் , கோவையில் உள்ள தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.

கடந்த 18 மற்றும் 19 ந்தேதிகளில் அங்குள்ள சிவமுருகன் லாட்ஜில் தங்கி இருந்த நிலையில் 18 ந்தேதி நள்ளிரவு மருத்துவர் ராமசுப்புவின் ஒரு வயது பேரனுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

குழந்தை வலியால் அலறித்துடிக்க , தனது பேரனுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு ராமசுப்பு கடை வீதிக்கு சென்றுள்ளார்.

அங்கு 24 மணி நேர மருந்தகம் ஒன்று கூட இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு திகைத்து நின்ற அவர், இரவு ரோந்துப்பணியில் இருந்த காவலர்களிடம் நிலைமையை எடுத்து கூறி உள்ளார்.

அப்போது பணியில் இருந்த காவலர் சிவா தங்கதுரை என்பவர், மருத்துவர் ராமசுப்புவின் நிலை அறிந்து அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்று தேடிப்பார்த்த நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் மருந்து கடைகள் இல்லாத நிலையில் பூட்டப்பட்டுக்கிடந்த ஒரு மருந்தக உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு, வரவைத்து கடையை திறந்து அவரது மருந்தகத்தில் இருந்து மருத்துவர் ராம்சுப்புவுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க உதவி செய்துள்ளார்.

அவற்றை வாங்கிக் கொண்டு வந்து தனது பேரனுக்கு சிகிச்சை அளித்துள்ளார் மருத்துவர் ராமசுப்பு. அந்த காவலர் தக்க நேரத்தில் சிரமம் பாராமல் மருந்து கிடைக்க உதவியதால் அவரது பேரன் குணமடைந்துள்ளான்.

மறுநாள் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி இருக்கின்றார் மருத்துவர் ராமசுப்பு..!

அந்த காவலரின் இந்த மனித நேய உதவிக்கு பாராட்டு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு அனுப்பி உள்ள பாராட்டு கடித்தத்தில் மருத்துவர் ராமசுப்பு மேற்கண்ட தகவல்களை விவரித்துள்ளார்.

கொள்ளையர்களையும் கொலையாளிகளையும் விரட்டிப்பிடிப்பது மட்டுமல்ல, ஆபத்து காலத்தில் தவிப்பவர்களுக்கு உதவுவதும் போலீசாரின் கடமை என்பதை தனது தன்னலமற்ற பணியால் காவலர் சிவா தங்கதுரை நிரூபித்துள்ளார் என அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனும் அந்த காவலரை பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளார்.

அதே நேரத்தில் திருச்செந்தூர் போன்ற முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகங்கள் செயல்பட மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


Advertisement
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement